தென்னிலங்கையில் பிரபலமாகும் அரசாங்கத்தின் போர் அணுகுமுறை
May 8, 2008 by Vikalpa_N
Filed under Human Security, தமிழ்
அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய தேசிய ரீதியில் பிரச்சினைக்குரிய ஐந்து முக்கிய விடயங்களை அவர்களின் கணிப்பின் படி முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை தரப்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டபோது‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 28.1் சதவீதமானவர்கள் பொருளாதாரத்தையும் 22.7 சதவீதமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் மோதல் என்பதையும் 19.8 சதவீதமானவர்கள் இலங்கையின் சமாதானச் செயற்பாடு என்பதையும் 15 சதவீதமானவர்கள் சட்டமும் ஒழுங்கும் என்பதையும் 13.7 சதவீதமானவர்கள் ஊழல் என்பதையும் தமது முதல் தெரிவாக குறிப்பிட்டுள்ளனர்.
சிறுபான்மை சமூகத்தவர்களை பொருத்தவரையில்‚ பொருளாதாரத்தை 27.4 சதவீதமான மலையகத் தமிழர்களும்‚ 33.5 சதவீதமான முஸ்லிம் சமூகத்தவர்களும் தெரிவு செய்திருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் மோதல் என்பதை தெரிவுசெய்த முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்கள் முறையே 16.0‚ 16.9 சதவீதத்தினராகும். இலங்கையின் சமாதானச் செயற்பாடு என்பதை 29.2 சதவீதமான முஸ்லிம் சமூகத்தவர்களும்‚ 25.2 சதவீதமான மலையகத் தமிழர்களும் தெரிவுசெய்திருந்தனர்.
இந்த புள்ளிவிபரங்கள் கடந்த வாரம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் வெளியிடப்பட்ட 2008 பங்குனி மாத “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) ஆய்வு முடிவு அறிக்கையில் உள்ளவை. இவ் ஆய்வானது 2001ல் ஆரம்பிக்கப்பட்டு சமனான கால இடைவெளியில் நடாத்தப்பட்டு வருகின்ற சமாதான நம்பிக்கைச் சுட்டி எனும் ஆய்வுத் தொடரின் 28 வது ஆய்வாகும்.
மேற்படி புள்ளிவிபரங்களின் படி தென் இலங்கை சிங்கள சமூகத்தில் இரண்டில் ஒரு பகுதியினருக்கு இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினையுடன் தொடர்புபட்ட விடயங்கள் முக்கியமானவையாக தென்படுகின்றது என்று கொள்ளலாம். ஆனால்‚ இந்த விடயம் தொடர்பில் அவர்களின் மற்றைய அபிப்பிராயங்கள்‚ அறிவு என்பவற்றை பார்க்கும் போது சற்று கவலை தரும் விதத்தில் அவை அமைந்திருப்பதுடன்‚ அவை ஆழமான பல கருத்துகளை வெளிப்படுத்துபனவாக கொள்ளத்தக்கவை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனையில் இலங்கை பிரச்சினை தொடர்பில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மீள பார்த்தோமானால்‚ ‘வடக்கு கிழக்கு போராட்டம் மீது புதிதாகச் சிந்திப்பதற்கும் ஓர் தீர்வை உருவாக்குவதற்கு புதியதோர் அணுகுமுறையைக் காண நான் உறுதி பூண்டுள்ளேன். கடந்த காலத்தில் இத்தொடர்பில் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளினதும் சாதகங்களையும் பாதகங்களையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு நான் புதிய பாதையொன்றைப் பின்பற்றுவதற்கு நான் உத்தேசித்துள்ளேன். அத்தகைய பாதையை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை ‘பிரிக்கப்படாத நாடு – பெரும்பான்மையோர்கள் இணக்கப்பாடு – கெளரவமான சமாதானம்’ என்பதாகவிருக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது.
மேலும்‚ ‘நான் பதவியேற்றவுடன் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சகல சனநாயகக் கட்சிகளுடனும் மேலே குறிப்பிட்ட கொள்கை அடிப்படையில் நான் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவேன். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத அரசியல் கட்சிகளுடனும் கூட நான் இதைப் போன்ற கலந்துரையாடல்களைச் மேற்கொள்ளத் தொடங்குவேன்’ என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த பிரச்சினை தொடர்பில் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவும்‚ முழுமையான போரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணுகுமுறையாக இருந்தது என்று கூறலாம். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆறு மாதத்தின் பின்னர் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு அமைக்கப்பட்டது. ஆரம்பம் தொட்டு இராணுவ முன்னெடுப்பு சிறிது சிறிதாக மும்முரப்படுத்தப்பட்டு வந்தாலும்‚ இந்த வருடம் தை 16ம் திகதியுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு யுத்த முன்னெடுப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து தை 24ம் திகதி சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு தனது யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள்‚ 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் சர்வ கட்சி பிரதிநிதித்துவ குழுவில் மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகித்தாலும்‚ பின்னர் அதில் இருந்து விலகியது. சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் முன்வைக்கப்பட்ட பின்னர் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு மற்றும் அதன் யோசனைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது. 13வது திருத்தச்சட்டத்தினை செயற்படுத்த தாம் ஒருபோதும் இடம் கொடுக்கப்பபோவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்தது. சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவினை கலைத்து அதிகாரப் பகிர்வு திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பதை கைவிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.
பங்குனி மாத “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) ஆய்வு அறிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் வெளியிடப்படடுள்ளன.
தெற்குப் பெரும்பான்மையினரின் கருத்தை அரசியல் தீர்வொன்றிற்கு கொண்டு வருவதில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் செயற்திறன் தொடர்பில் நீங்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்று கேட்கப்பட்ட போது 45.6 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு தொடர்பில் தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். 22.6 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் இது தொடர்பில் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். 14.3 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் செயற்திறன் மீது எந்தவித நம்பிக்கையுமில்லை என்று கூறுகின்றனர். ஆக‚ 17.5 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் மட்டுமே தெற்குப் பெரும்பான்மையினரின் கருத்தை அரசியல் தீர்வொன்றிற்கு கொண்டு வருவதில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் செயற்திறன் தொடர்பில் நம்பிக்கையுள்ளது என்ற தெரிவித்துள்ளனர்.
சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு தொடர்பில் தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தவர்களில் முஸ்லிம் சமூகத்தவர்கள் 62.4 சதவீதமாகவும்‚ மலையகத் தமிழர்கள் 43.2 சதவீதமாகவும் காணப்படுகிறது.
சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு பற்றி தெரிந்த தென் இலங்கை சிங்கள மக்களிடம் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவில் உள்ளடக்கப்பட வேண்டிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவ மட்டங்கள் தொடர்பிலான அவர்களின் திருப்தி பற்றி கேட்ட போது 10.9 சதவீதத்தினர் மட்டுமே திருப்தியடைவதாக தெரிவித்துள்ளனர்.
அதே போல்‚ மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் ‘சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவினை கலைத்து அதிகாரப் பகிர்வு திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பதை கைவிடுமாறு’ கேட்டுக்கொண்டுள்ளது’ என்பது பற்றி கேட்ட போது‚ சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு பற்றி தெரிந்த தென் இலங்கை சிங்கள மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்த கருத்துடன் உடன்படுவதாகவும்‚ அதே அளவானவர்கள் உடன்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் இனப்பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற இரண்டு விதமான அணுகுமுறைகளாக ஒரு பக்கம் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவும் மற்ற பக்கம் இராணுவ முன்னெடுப்பும் அமைந்திருக்கிறது. இதில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழுவின் பிரபல்யம் பற்றி மேலே பார்த்தோம். அரசின் இராணுவ முன்னெடுப்பு பற்றி மக்களின் கருத்தையும் பார்த்தால்‚ இலங்கை இனப்பிரச்சிரன தொடர்பில் தென் இலங்கை சிங்கள மக்களின் தற்போதைய நிலைப்பாடு பற்றி ஒரு தெளிவு கிடைக்கும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போரை வழி நடத்தும் விதம் தொடர்பில்‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 91.4 சதவீதமானவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். மேலும்‚ 92.2 சதவீதமான தென் இலங்கை சிங்கள மக்கள் அரசினது இராணுவம் தற்போது பலமான நிலையில் உள்ளதாக மதிப்பிடுகின்றனர். இந்த கருத்து கடந்த வருடம் கார்திகையில் 88 சதவீதமானவர்களிடமே காணப்பட்டது.
இந்த வகையில் மூன்று தசாப்தத்திற்கும் மேலாக தொடர்கினற இனப்பிரச்சினைக்கு தீர்வு விடயம் தொடர்பில் அரசு தெரிவிக்கின்ற வழி முறைகள் இரண்டில் போர் ரீதியான அனுகுமுறையே தென் இலங்கையில் பிரபல்யம் பெற்றுள்ளதுடன் வரவேற்கப்படுவதுமாக அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது.
கடந்த வருட நடுப்பகுதியளவில்‚ காப்பி விடுதியில் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு (ஊயகé ன’ யுீசுஊ) எனும் கட்டுரையில் ஆய்வாளர்களான பிரதீப் பீரிஸ் மற்றும் அனுபமர ரனவன ஆகியோர் குறிப்பிட்டது போன்று ‘இராணுவ முன்னெடுப்பு விடயத்தில் ஊடகங்கள் முன்னெடுக்கும் பிரசாரங்கள் சிங்களவர்கள் மத்தியில் அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் உள்ள ஆர்வத்தை குறைக்கும். இராணுவ வெற்றி பற்றி ஆளுங்கட்சியினரின் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரத்தால் சர்வ கட்சி பிரதிநிதித்துவக் குழு முன்வைக்கும் தீர்வு தொடர்பில் சிங்களவர்கள் மத்தியில் முக்கியத்துவம் குறையும்’ போன்ற கருத்துகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளதை சமாதான நம்பிக்கைச் சுட்டி ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.
ஆனால்‚ அண்மைய முகமாலை கள நிலமை‚ மற்றும் மணலாறு முகாம் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்பன அரசு பிரசாரம் மேற்கொண்டு வரும் இராணுவ வெற்றியை கேள்விக் குறியாக்கியள்ளது எனலாம்.
மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி
02.05.2008
දෙමළ ජීවිතය
May 8, 2008 by Vikalpa_N
Filed under Eastern Elections, Governance, Human Rights, Human Security, සිංහල
අපේ දෙමළ සගයින් දෙදෙනෙකුගේ ඥාතීන් පසුගිය සතියේ පොලිස් පරීක්ෂනයට භාජනය විය. කොළඹ දෙමළ ජනයා මුහුණ දෙන තත්ත්වය තේරුම් ගැනීමට මෙම සිදුවීම් දෙකම අපට ඉවහල් වෙයි.
ඉන් එක් අයකු රහස් පොලීසියට කැදවා තිබුනේ ඇය සමඟ යාපනයේ දී හයවැනි පංතියේ ඉගෙන ගත් වෙනත් දෙමළ තරුණියක අත් අඩංගුවට ගෙන තිබූ නිසා ය. රහස් පොලීසියට කැදවනු ලැබූ විට පවුලේ සියළුම දෙනා බියට පත් විය. කෙසේ වෙතත් ප්රශ්න කිරීමෙන් අනතුරුව ඇය නිදහස් කෙරුණි.
අනෙක් සිදුවීම පිලයන්දල බෝම්බයට සම්බන්ධ ය. මෙම බෝම්බය සම්බන්ධයෙන් සැක පිට අත් අඩංගුවට ගත් දෙමළ ජාතිකයකු තමා නැවැතී සිටි බවට ගල්කිස්ස ප්රදේශයේ ලිපිනයක් දී තිබුණි. පොලීසි නිලධාරීහු මේ ලිපිනය සොයා පැමිණියහ. නමුත් ලිපිනයේ යම් අඩුවක් නිසා එවැනි ස්ථානයක් සොයා ගැනීමට බැරි විය.
එවිට ඒ අසළ සිටි අයකු අන්න අවහල් ගෙදර නම් දෙමළ කට්ටියක් ඉන්නවා යැයි පොලීසියට කී බව කියනු ලැබේ. අනතුරුව එහි පැමිණි පොලීසිය නිවසේ සිටි පිරිමින් දෙදෙනා අත් අඩංගුවට ගත්තේ ය. ඔවුන් දෙදෙනා නිදහස් කෙරුණේ ඥාතීන් මැදිහත් වූ නිසා පැය 18ක් පමණ ගතවූ පසුව ය. මේ සිදුවීම ද පවුලේ උදවිය මහත් කළබලයට පත් කලේ ය. ඥාතීන් කොළඹ නොසිටියේ නම් දෙමළ ජාතිකයින් දෙදෙනා මාස ගණනාවක් හෝ සැක පිට සිර අඩස්සියේ තැබෙන්නට ඉඩ තිබුණි. පිළියන්දල බෝම්බයට සැක පිට දෙමළ ජාතිකයින් දෙදෙනෙකු ගල්කිස්සෙන් අල්ලයි කියා සිංහල පුවත්පත්හි ශිර්ෂ පාඨ පළවන්නටද තිබුණි.
එලෙස ශීර්ෂ පාඨ පුවතක් බවට පත් වූ පුවතක් නම් බුත්තල බස් බෝම්බයට සම්බන්ධ වතුකර දෙමළ ජාතිකයින් පස් දෙනෙකු අත් අඩංගුවට ගැනීම ය. මෙම දෙමළ ජාතිකයින් පස් දෙනාම පසුව නිදහස් කෙරුණි. නමුත් කිසිදු පුවත්පතක් ඒ බව වාර්තා කලේ නැත. දෙමළ ජනයාට ත්රස්තවාදට සම්බන්ධ යැයි රිසි සේ චෝදනා කිරීමටත් ඉන් පසු ඒ ජනයාට සිදු වන්නේ කුමක්දැයි නොසලකා හැරීමත් මෙරට සිංහල ජනමාධ්යයේ පුරුද්ද බවට පත්ව තිබේ.
ගෝඨාභය කතා
මට බලය ඇතොත් එකඟ නොවන ( ඔහුගේ වචනයෙන් දේශද්රෝහී) පත්තර වසා දමමි යැයි කියන්නේ ආරක්ෂ ලේකම් ගෝඨභය රාජපක්ෂ මහතා ය.
විවේචනාත්මන ජනමාධ්ය ( ඔහුගේ් වචනයෙන් මඩ ගසන) පාලනයට 2002 දී අහෝසි කරන ලද සාපරාධි අපහාස නීතිය ගෙන ආ යුතු යැයි යෝජනා කලේ ද ඒ මහතා ය.
හදිසි නීතිය යටතේ ජනමාධ්ය පාලනය කිරිම පිණිස වාරණ නියෝග පැනවීම පිණිස ගැසට් පත්රයක් සකස් කර ඉදිරිපත් කැරුනේ ද ඒ මහතා යටතේ ය.
ආරක්ෂ ලේකම් ධුරය ජනාධිපතිවරයාගේ ඥාතියකුට දිය යුතු බව ව්යවස්ථාවන් සහතික කළ යුතු යැයි කීවේ ද ඒ මහතා ය.
ඒ මහතා ජනාධිපති සහොදරයා වුවද දැන් දරන්නේ ආණ්ඩුවේ නිලයකි. ආරක්ෂක අමාත්යාංශයේ ලේකම් ධුරයය. ඒ මිස දේශපාලන කතා පවත්වන අයෙකුගේ ධුරයක් නොවේ. නමුත් ඒ මහතා රූපවාහිනී නාලිකාවන්හි පෙනී සිටිමින් පවත්වන තරමක් පවත්වන්නේ දේශපාලන කතා ය. මැතිවරණ ප්රචාරයේ ද යෙදෙයි.
ආණ්ඩු පාලනය යටතේ පවත්නා පුවත්පත් තමන්ට සහාය නොදෙන බැවින් තමා ආරක්ෂ අමාත්යාංශයට වෙබ් අඩවියක් නිර්මාණය කළ බවත් එය තමාගේ වෙබ් අඩවිය බවත් ඔහු කිය යි. ආණ්ඩුවේ ජනමාධ්ය මර්දන පිළිවෙත සහ බොරු ප්රචාර ලොවට පෙන්වන හොදම නිදර්ශනය බවට අද පත්ව ඇත්තේ මෙම වෙබ් අඩවි ය යි.
ඔහුගේ වෙබ් අඩවිය මුහමාලේ සටන( 23.04.08) ගැන මැයි 03 දින කියා සිටියේ අවසාන සංඛාලේඛන අනුව මිය ගිය සොල්දාදුවන් ගණන 91ක් බව යි. එදිනම ආණ්ඩු පාලනයේ පවතින රූපවාහිනී ඔස්සේ කතා කරමින් ඔහු කීයේ සියයකට වඩා සොල්දාදුවන් මිය ගිය බව යි.
එය කතුවරුන් බල්ලන්ට සමාන කරයි. ජනමාධ්යවේදින්ට ලේබල් අලවමින් දේශදෝහීන් ලෙස නම් කරයි. එකඟ නොවන පුවත්පත් එල්ටීටීඊ සහායකයින් ලෙස ප්රහාරයට ලක්කරයි. මෙවැනි මිතුරන් සිටින ආණ්ඩුවකට සතුරන් අවශ්ය නැත.
නැගෙනහිර අභියෝගය
පොදු ජන එක්සත් පෙරමුණ ජයගත හොත් එහි නායත්වය හිමිවන්නේ හිස්බුල්ලාට නොව පිල්ලෙයාන්ට ය. මන්ද යත් පාදු ජන එක්සත් පෙරමුණේ ජය තීරණය වනු ඇත්තේ මඩකලපු දිසාව පිල්ලෙයාන් සහ ටීවීඑම්පී ජය ගත හොත් පමණක් නිසා ය. ඔහු එහි ආසන හත අටක් දිනා ගත යුතු ය. පොදු පෙරමුණේ සිංහල හෝ මුස්ලිම් අපේක්ෂකයින්ට එතරම් ආසන ගණනක් දිනා ගත නොහැක.
පිල්ලෙයාන් ජය ගතහොත් ආණ්ඩුව 13 වන සංශෝධනයේ සමස්ත බලය ඔහුට පැවරිය යුතු ය. නැගෙනහිර පළාත් සභාව අන් පළාත් සභා මෙන් නොව 13 වන ව්යවස්ථාව සහමුලින්ම යොදා ගැනීමට උත්සාහ කරනු නොඅනුමාන ය.
එජාප – මුස්ලිම් කොන්ග්රස් සභාගය ජය ගත්හොත් ඒ මුස්ලිම් ක්රොන්ග්රසය සහ රවුෆ් හකීම් නිසා ය. එහි නායකත්වය හිමි වනු ඇත්තේ රවුප් හකීම්ට ය. දැන් දෙමළ ජාතික සංධානය ද ආණ්ඩුව පරාජය කරන ලෙස ප්රසිද්ධ ඉල්ලීමක් කර ඇති නිසා පෙනෙන විදියට වැඩි බරක් අත්තේ එජාප – කොන්ග්රස් සංධානයට ය.
එජාප – කොන්ග්රස් සංධානය ජය ගතහොත් 13 වන සංශෝධනය ක්රියාත්මක කිරීමට ආණ්ඩුව මැලි වනු ඇත. එසේ වුවහොත් බලය බෙදීමට ඇති සිංහල බහුතර ආණ්ඩුවේ සුදානම යළි ප්රශ්න කිරිමට ලක් වෙයි.
පිල්ලෙයාන් සහ ටීවීඑම්පී ජය ගත හොත් එය මුස්ලිම් කොනග්රසයේ පරාජයක් බවට පත්වනු ඇත. එජාප – කොන්ග්රස් සංධානය ජයගත හොත් එය පිල්ලෙයාන් පිලේ මහත් පරාජයකි.
කවර පාර්ශවයක් ජය ගත්තද එය එක්කෝ දෙමළ හෝ නැත්නම් මුස්ලිම් දේශපාලනයේ ජයග්රහණයක් බවට පත් වීම වැළැක්වීම අද ඇති ප්රධානතම අභියෝගය යි. එම අභියෝගය අප හැම සතු ය. ප්රධාන දේශපාලන පක්ෂ දෙකම සතු ය. ටීයීඑම්පී සහ කොන්ග්රසය සතු ය.
එමෙන්ම කවර පාර්ශවයක් ජය ගත්තද 13වන සංසෝධනයේ සම්පූර්ණ බලතල පවරා දී බලය භුක්ති විදීමට නැගෙනහිර ජනයාට අවස්ථාව සළසා දීම ද අප හැම සතු අභියෝගය යි. ඒ සඳහා සමගාමී ලැයිස්තුව අහෝසි කිරීමත් පළාත් සභා බලතල පාර්ලිමේන්තුවේ සරළ බහුතර ජන්දයකින් යළි පවරා ගැනීමේ නීතිය ක්රියාත්මක නොකර සිටින බවට දෙන ස්ථිර පොරොන්දුවක් අත්යාවශය ය.
එවැනි දේශපාලන සංස්කෘතියක් පිහිටුවීමට බැරි වුව හොත් නැගෙනහිර ඡන්දයෙන් අත්වනු ඇත්තේ ජයග්රහණයක් නොව දේශපාලන මෙන්ම අවසානයේ දී යුදමය ද පරාජයකි.
සුනන්ද දේශප්රිය
මහජන සේවයට කැපවුණු ලංගම සේවකයෝ
මගියා - කිරිබත්ගොඩට ටිකට් එකක් දෙන්න
(ඔහු රුපියල් 100 නෝට්ටුවක් කොන්දොස්තර මහතා වෙත දිගුකරයි.)
කොන්දොස්තර - රුපියල් 16 ක් දෙනවද?
මගියා – අනේ මා ගාව නෑනෙ
කොන්දොස්තර - එහෙනං මොකටද ඕයි ලංගම බස්වල යන්නෙ? ප්රයිවට් බස්වල යන්නෙ නැතුව. අපිටම වද දෙනවා.
මගියා – එහෙම කියන්න එපා
කොන්දොස්තර -එහෙනං කොහොමද කියන්නෙ? ඉතුරු සල්ලි ගන්න ඩිපෝවට එන්න කියන්නද?
මේ සිදුවීම සිදුවුනේ 07.04.2008 කොල්ලුපිටියේ සිට කඩවතට
ධාවනය වූ 154 ල.ං.ග.ම බස්රථයක මගියෙක් සහ කොන්දොස්තර මහතා අතරයි.
සුරේන් ජුලියන්
ජවිපෙ දෙකට කැඩෙයි…..??
තමාව පක්ෂයේ සියළු තනතුරුවලින් සහ පක්ෂ සාමාජිකත්වයෙන් ඉවත් කොට ඇති බවට ඊයේ විමල් වීරවංශ මන්ත්රීවරයා පාර්ලිමේන්තුවේදී විශේෂ ප්රකාශයක් කරමින් කියා සිටියේය. කාලයක් තිස්සේ, එළියට නොපෙනෙන්නට ජනතා විමුක්ති පෙරමුණ අභ්යන්තරයේ ඇවිලෙමින් තිබූ සීිතල යුද්ධය, විමල් වීරවංශ මහතා පාර්ලිමේන්තුවේදී කළ මේ දීර්ඝ හැඟීම්බර කතාවෙන් පසු ඊයේ පුපුරා ගියේය.
වීරවංශ මහතාගේ එම ප්රකාශයෙන් පසුව ජවිපෙහි පාර්ලිමේන්තු මන්ත්රිවරු 11 දෙනෙකු තමන් වීරවංශ මහතාට සහාය පළ කරන බවට ප්රසිද්ධියේ කියා සිටියහ. මේ පිරිස විසින් තමන්ගේ ස්ථාවරය රටට හෙළිදරවු කිරීමේ අරමුණින් ඊයේ සවස කොළඹ නිපොන් හෝටලයේදී ප්රවෘත්ති සාකච්ඡිවක් කැඳවා තිබුණි.
වීරවංශ මහතාට සහාය පළ කිරීමට ඉදිරිපත් වී ඇත්තේ, පියසිරි විජේනායක, අචල සුරංග ජාගොඩ, සුජාතා අලහකෝන්, ජයන්ත සමරවීර, දීපාල් ගුණසේකර, ජයන්ත රණවීර, පද්ම උදයශාන්ත, සමන් සිරි හේරත්, නිමල් ප්රේමවංශ, වීර කුමාර දිසානායක, සහ එම්. මුසම්මිල් යන මන්ත්ර්රීවරුන් 11 දෙනාය. කෙසේ හෝ ප්රවෘත්ති සාකච්ඡාව අතරතුරදී ඊට සහභාගි වූ රණවීර පතිරණ මන්ත්රීවරයා සෙසු මන්ත්රීවරුන්ගේ අදහසට විරුද්ධව අදහස් ඉදිරිපත් කරන්නට වීමත් සමගම එතැන විශාල කලබැගෑනියක් ඇති විය. අවසානයේදී රණවීර පතිරණ මන්ත්රීවරයාට පොලිස් රැකවරණ මැද එතැනින් ඉවත් ව යාමට සිදු විය.
ඊයේ නිපොන් හෝටලයේ පැවති ප්රවෘත්ති සාකච්ඡාව ආවරණය කළ විකල්ප, එහිදී ලබා ගත් වීඩියෝ දර්ශන කිහිපයකි ඉහතින් දැක්වෙන්නේ.
அதிகாரப் பரவலாக்கத்திற்கு அரசாங்கம் தயாராகிறதா?
March 31, 2008 by Vikalpa_N
Filed under Democracy, Peace and reconciliation, தமிழ்
இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை‚ ‘கிழக்கின் உதயம்’ என‚ கடந்த வருடம் யூலை மாதம் 19ம் திகதி‚ சுதந்திர சதுக்கத்தில் அரசு வெகு விமரிசையாக கொண்டாடியது. இவ்விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில் கிழக்கு மாகாணம் தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
‘கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்ததா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் பிரஜர உரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்ததுபோல் சத்தமிடுவார்கள். என்று தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 9 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ம் திகதி முதல் 25ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இவ்வருடம் ஜனவரி 12ம் திகதி‚ தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 24ம் திகதி‚ சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினர் தேசிய பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கான தனது யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் பகுதி 3.1ல் ‘கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் அந்தத் தேர்தல் உடனடியாக நடத்தத்தப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எப்படியேர மார்ச் 10ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 9 அரசியல் கட்சிகளும் 22 சுயாதீனக் குழுக்களுமாக 831 பேர் போட்டியிட்டனர். 14 வருடங்களுக்கு பின்னர் நடந்த தேர்தல் இது. 60 வீதமான மக்கள் தமது வாக்குரிமையை பயனபடுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம சமீபத்தில் கொழும்பில் செயற்படும் இராஜதந்திரிகள் மத்தியில் ஆற்றிய உரையில் இந்த தேர்தல் பற்றி கருத்து தெரிவிக்கையில்‚ தற்போதைய மோதல்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை மீளவும் ஏற்படுத்துவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் அதற்காக அரசாங்கத்திடம் முறையான திட்டம் இருக்கிறது என்பதை நடந்து முடிந்த இந்தத் தேர்தல் மூலம் உள்ளுர் மற்றும் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும்‚ இதற்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் அதிகாரத்தில் கீழ் இருந்த பிரதேச மக்களின் ஜனநாய உரிமைகளை மீள கொண்டு வரும் அரசின் கொள்கையில் இது ஒரு பிரதான மைல்கல் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (வுஆஏீ) ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு மாறுவதை நாம் காண்கிறோம் என்றும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு ஏற்ப மே மாதம் நடாத்த திட்டமிட்டப்பட்ட கிழக்கு மாகாணம் முழுவதுக்குமான மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்பதை வெற்றிகரமாக நடாத்தப்பட்ட தேர்தல் சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியும்‚ தமிழர் விடுதலைக் கூட்டணியும் இத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆரம்பத்தில் இருந்து மட்டு தேர்தல் விடயத்தில் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக தெரிவித்தது. கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வந்த ஒரு பயங்கரவாத ஆயுதக் குழுவை அங்கிருந்து வெளியேற்றி விட்டு வேறு ஒரு பயங்கரவாத ஆயுதக் குழுவுக்கு நிர்வாகத்தை அரசாங்கம் கையளித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது.
தொடர்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டில்‚ சுயாதீனமானதும் நியாயமானதுமான தேர்தல் கிழக்கில் நடத்தப்படவில்லை. பொலிசாரால் சுயாதீனமாக இயங்க முடியவி்ல்லை. என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில்‚ ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் 17வது திருத்தச்சட்டத்தின் படி அரசியலமைப்பு சபையினை நியமிக்குமாறு வலியுருத்திவருவது ஞாபகப்படுத்தத்தக்கது. அரசியலமைப்பு சபையினை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். பின்னர் அரசியலமைப்பு சபையினால் சுயாதீன ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் செய்யப்பட வேண்டும். தேர்தல்‚ போதுச் சேவைகள்‚ பொலிஸ்‚ மனித உரிமைகள்‚ இலஞ்ச ஊழல்‚ நிதி மற்றும் எல்லைகள் நிர்ணயித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பானதாக அவ் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமையும்.
இவை இப்போது நடைமுறையில் இல்லாததால் ‘சுயாதீனமானதும் நியாயமானதுமான தேர்தல் கிழக்கில் நடத்தப்படவில்லை’‚ ‘பொலிசாரால் சுயாதீனமாக இயங்க முடியவி்ல்லை’ என்ற ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக பொய் என்று மறுப்பதில் அரச தரப்பிற்து சங்கடங்கள் நிறையவே உள்ளது.
இந்த நிலையில்‚ உடணடியாக மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கான அறிவிப்பை விடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கு அமைய அண்மையில்‚ கிழக்கு மாகாண தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 27ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரையான காலத்தில் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க அறிவித்திருந்தார். மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மே மாதத்தில் நடாத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் தழிழர் விடுதலை கூட்டணியும் போட்டியிடாமைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் போட்டியிடுவதே காரணம் என்று தெரிவித்திருந்தது. கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக்குழுக்களை நிராயுதமாக்கும் படி உத்தரவிடுமாறு கோரி பவ்ரல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடாத்தும் சூழ்நிலை இல்லை என பல சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.
ஆகக் குறைந்தது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னராவது ‘ஆயுதக்குழு’ எனும் விடயத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் ‘அரசியலமைப்பு சபை’யினையும் நியமிக்குமாயின் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் உற்பட அரச தரப்பினர் அனைவரும் சொல்லும் ’ஜனநாயகம்’ தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கையாக அதை கொள்ள முடியும்.
இது இவ்வாறு இருக்க‚ சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டது என்பது தெரிந்ததே. குழுவின் அறிக்கையில் பகுதி 1.3ல் 1987 ஜுலையில் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் 1978 அரசியலமைப்புக்கு 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்தின் விளைவாக இலங்கை முழுவதுமாக மாகாண சபகள் அமைக்கப்பட்டன. ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டது. பரவலாக்கம் செய்யப்பட்ட அதிகாரங்கள் இருபட்டியல்களின் கீழ் அதாவது‚ மாகாணங்களுக்கான பட்டியல்‚ பொதுப் பட்டியல் என்பவற்றின் கீழ் குறித்துரைக்கப்பட்டன. ஏனைய சகல அதிகாரங்களும் ஒரு ஒதுக்கீட்டு பட்டியலின் ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டன. இந்த மூன்று பட்டியல்களிலும் உள்ளடக்கப்படாத எந்தவொறு விடயதானமும் அல்லது செயற்பாடும் ஒதுக்கீட்டு பட்டியலின் கீழ் வருபவையாக கருதப்படும்‚ என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும்‚ அறிக்கையின் பகுதி 3ல் ‘அரசியல் அமைப்புக்கான 13வது திருத்தத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் பட்ச அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்படுவதை அனுமதிப்பதற்கு தேவையான விசேட ஏற்பாடுகள்’ என்று குறிப்பிடுகிறது.
சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் கிழக்கு மாகாணசபைக்காக தேர்தல் ஆயத்தங்கள் என்பவற்றை வைத்து நோக்கும் போது அரசு‚ ‘மாகாண சபைகளுக்கான அதிகார பரவலாக்கம்’ விடயத்தில் முன்னோக்கி நகர்வதாக தோன்றுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் மாகாணசபைக்கான அதிகாரங்கள் பற்றிய மக்களின் எண்ணங்கள் அபிப்பிராயங்கள் தொடர்பான சில ஆய்வு தரவுகளை பார்ப்பது பொருத்தமாக அமையும் என நம்புகிறோம்.
2004 மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் நடாத்தப்பட்ட சமாதான செயற்பாடு தொடர்பிலான அறிவு‚ மனோநிலை‚ மற்றும் பழக்கங்கள் பற்றிய அளவீடு (முயுீளு) முடிவுகளில் மாகாணசபைக்கான அதிகாரங்கள் பற்றி பொது மக்களின் தெரிவித்த கருத்துகளில் புள்ளிவிபரங்கள் உள்ளன. மாகாணசபைக்கான அதிகார பரவலாக்கத்திற்கு ஆதரவாக மற்றும் எதிராக செயற்படும் இரு தரப்பினருக்கும் இத்தரவுகள் முக்கியமானதாக அமையும்.
‘மத்திய அரசின் அதிகாரங்களைக் குறைத்துக் கொண்டேனும் உள்ளுராட்சிஃ பிரதேச ஆட்சி அதிகார சபையின் அதிகாரங்களை கூட்ட வேண்டும்’ என்ற கருத்தை 49.4 சதவீதமான மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
‘சில உள்ளுராட்சிஃ பிரதேச ஆட்சியின் அதிகாரங்கள் மற்றயதை விட கூட்டப்பட வேண்டும்’ என்ற கருத்தை 26.3 சதவீதமான மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
2003ம ஜூன் மாத ஆய்வில் 41 சதவீதமான மக்களே நாட்டின் உள்ளுராட்சி நிறுவனங்கள் அதாவது மாநகர சபை‚ நகர சபை‚ பிரதேச சபை‚ மற்றும் மாகாண சபை ஆகிய நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இவ் ஆய்வானது யாழ்ப்பாணம்‚ வவுனியா‚ திருகோணமலை‚ மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அடங்களாக நாட்டின் 22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.
21.03.2008
ජේමිස්ට අත්වූ ඉරණම
March 19, 2008 by Vikalpa_N
Filed under Human Rights, සිංහල
ජේමිස්ට කිසිඳු නඩු විභාගයකට මුහුණ නොදී වසර 50ක් සිරබත් කෑමට සිදුවිය. අවසානයේදී ඔහු සියලු චෝදනා වලින් නිදහස් විය. 1958 අගෝසතු 31 වන දින සිය පියාට පිහියකින් ඇණ තුවාල සිදුකිරීම සම්බන්ධයෙන් කුරුණෑගල අධිකරණයේදී ඔහුට විරුද්ධව නඩු පවරන ලදි.
ජේමිස් ගේ සිද්ධිය මගින් වත් බන්ධනාගාර පිළිබඳ යථාර්ථය අවබෝධ කරගත යුතුය.
ශ්රී ලංකාවේ සිරගෙවල් වල තන්වය සතුටු දායක නැත. යටිතල පහසුකම් වල තන්වය ඉතාම ශෝචණීය වේ. සිරකරුවන්ට ඇඳීමට ප්රමාණවත් ඇඳුම් නොමැති අතර, ඇතැම් අවස්ථාවලදී ඔවුන් නිරුවත්වද සිටී. වර්තමානය වන විට සිරකරුවන් අතර සිදුවන්නාවූ මත්ද්රව්ය භාවිතය බරපතල සමාජ ගැටලුවක් බවට පත්වී ඇත.
ජේමිස් වැනි සිරකරුවන් තවත් සිරමැදිරි වල සිටිනු ඇත. ජේමිස්ලා අප වැනිම මනුෂ්යයන්ය. වැරදිකරුවකු සිරගත කරනු ලැබීමේ පරමාර්ථය ඔහුව පුනුරුත්ථාපනය කිරීමයි. නමුත් ශ්රී ලංකාවේ බන්ධනාගාර වලින් මෙම අපේක්ෂිත අරමුණ ඉෂ්ඨ නොවේ. ඔවුන් නිරතුරුව වධහිංසාවට හා කෲර අමානුෂික සැලිකිලි වලට පාත්ර වේ.
රැඳවුම් ආයතනවල වධහිංසාව හා කෲර අවමන් සහගත සැලකිලි අවම කිරීමෙහිලා එක්සත් ජාතීන් විසින් වධහිංසාවට එරෙහි ජාත්යන්තර සම්මුතියට අදාල වෛකල්පික ප්රොටොකෝලය හඳුන්වා දී ඇත. ශ්රී ලංකාව මෙයට අත්සන් තබා නොමැත. මෙම සම්මුතියට අත්සන් කරන රාජ්යයන්ට තම රටවල බන්ධනාගාර පද්ධතිය දියුණු කිරීමේ අවශ්ය ආධාර ලබා ගැනීමේ අවස්ථාව උදාවේ.
දකුණු අප්රිකාවේ අසහාය නායක නෙල්සන් මැන්ඩෙලා මහතා වසර 26ක් බන්ධනාගාර ගතව සිටි පුද්ගලයෙකි. සිය සිරදඩුවම අවසාන වීමත් සමග දකුණු අප්රිකාවේ ජනාධිපතිවරයා බවට පත්වු ඔහු ප්රකාශකලේ –
‛‛ජාතියක් විනිශ්චය කල යුත්තේ ඔවුන්ගේ ඉහළ පුරවැසියනට සලකන ආකාරය මත නොව පහළ පුරවැසියනට සලකන ආකාරය මතය”
හර්ෂි චිත්රාංගි පෙරේරා
மக்கள் விடுதலை முன்னணியும் மாகாண சபை அதிகாரங்களும்
March 19, 2008 by Vikalpa_N
Filed under Democracy, Governance, தமிழ்
சமீபத்தில்‚ தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு யோசனைகளை முன்வைக்க என்று அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருந்தது தெரிந்ததே. 13வது திருத்தச்சட்டம் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையின் கொண்டு வரப்பட்டது. கிட்டத்தட்ட 30 வருட பிரச்சினைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் கிடந்த திருத்தச்சட்டமாகும். இதனையே முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக அரச தரப்பு தெரிவிக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் அமையும் சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் விரிவான கருத்தொருமிப்பு ஆவணம் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தது.
அரசாங்கத்தின் பங்காளிகளான ஜாதிக ஹெல உருமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இரண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் (வுஆஏீ) சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ‚ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடிய போது 13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை தாம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவில் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடம் பெறவில்லை என்பது தெரிந்ததே.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணி‚ 13வது திருத்தச்சட்டத்தினை செயற்படுத்த தாம் ஒருபோதும் இடம் கொடுக்கப்பபோவதில்லை என அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் சர்வ கட்சி பிரதிநிதித்துவ குழுவில் மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகித்தாலும்‚ அதில் இருந்து விலகிய பின்னர் இக் குழுவை கலைத்து விட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தாலும் சர்வ கட்சி பிரதிநிதித்துவ குழுவின் யோசனைகள் வெளியிடப்பட்டதன் பின்னர் அக்குழு மற்றும் அதன் யோசனைகளை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்து வருகின்றமை தெரிந்ததே.
அது மட்டுமன்றி கூடவே இந்தியாவையும் விமர்சனம் செய்கிறது. இதற்கு சீனாவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியிற்குமான உறவு மிகுந்த செல்வாக்கு செலுத்தினாலும் வெளியில் கூறப்படுகின்ற காரணங்கள் வேறு விதமானவை. 1987ல் எமது படையினர் வடமராட்சி போரில் வெற்றியடைய இருக்கையில்‚ இந்தியர தலையிட்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவை பணிய வைத்து செய்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் எமது நாட்டிற்கு பிரிவினைவாதத்தை அறிமுகப்படுத்தியது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பின்னணியிலேயே 13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்துமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச்சட்டத்தை தாம் எதிர்க்கின்றமைக்கு மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கும் காரணிகளில்‚ பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளவும் இணைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளது மற்றும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் போன்ற விடயங்களையும் முக்கியமாக சில காரணிகளாக குறிப்பிடுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் சில வருடங்களுக்கு முன்னர்‚ வடக்கு கிழக்கு மாகாணங்களின் இனைப்பு மற்றும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் போன்ற விடயங்கள் மற்றும் வேறு சில விடயங்களில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்றமை தொடர்பாக மக்களின் அபிப்பிராயங்கள் எப்படி இருந்தது என மீட்டிப் பார்ப்பது பொருத்தமாக அமையும் என நம்புகிறோம். மக்கள் அபிப்பிராயங்கள் பொதுவாக காலத்தோடு மாறுபடும். இந்த மாற்றத்திற்கு பல்வேறு அக மற்றும் புற காரணிகள் செல்வாக்கு செலுத்தும். சில அபிப்பிராயங்களில் மாற்றம் ஏற்பட நீண்ட காலம் எடுக்கும்‚ சில அபிப்பிராயங்கள் குறுகிய காலத்தில் மாற்றம் அடையும். அரசியல்‚ பொருளாதாரம்‚ பாதுகாப்பு‚ மற்றும் இன்னோரன்ன வகையில் தற்போதைய நிலைமையில் இவை காலாவதியான தரவுகளாக‚ இறந்த கால அபிப்பிராயங்களாக இருந்தாலும்‚ அப்போதைய நிலைமையில் மக்களின் அபிப்பிராயங்கள் என்னவாக இருந்தது என்கிற விடயம் பெறுமதிவாய்ந்தது.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக உயர் நீதி மன்றில் தாக்கல் செய்திருந்தது. 2006 ஒக்டோபரில் உயர் நீதி மன்றம் வடக்கு‚ கிழக்கு மாகாணத்தை இணைத்தமை செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்கியது. இக்காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் முன்வைத்த தனது 20 யோசனைகளில் ‘வடக்கு‚ கிழக்கு மாகாணத்தை பிரித்தல்’ என்பது ஒரு யோசனையாக இருந்தது. மேலும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து‚ சமாதான செயற்பாடுகளுக்கு உதவுவதில் இருந்து நோர்வேயை அகற்றுதல்‚ அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கையை 30 க்கு குறைத்தல் போன்றவையும் அடங்கியிருந்தன.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் 2006 ஆண்டு் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ‘சமாதான நம்பிக்கைச் சுட்டி’ ஆய்வின் முடிவுகளில் மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட ‘வடக்கு‚ கிழக்கு மாகாணத்தை பிரித்தல்’ எனும் யோசனையை 29 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர். 49 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் எந்த அபிப்பிராயமும் தெரிவிக்கவில்லை.
மற்றைய யோசனைகளான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தல்‚ சமாதான செயற்பாடுகளுக்கு உதவுவதில் இருந்து நோர்வேயை அகற்றுதல் என்பவற்றை ஆதரித்த சிங்கள சமூகத்தவர்களின் சதவீதங்கள் முறையே 27‚ 47 ஆகும். அன்று மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த இந்த யோசனைகள் இன்று நிறைவேற்றப்பட்டு விட்டன. இன்னும் சிறைவேற்றப்படாத அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கையை 30 க்கு குறைத்தல் எனும் யோசனையை அன்று ஆதரித்த சிங்கள சமூகத்தவர்களின் சதவீதம் 62 ஆகும்.
2003 ஜூன் மாதம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் சமாதான செயற்பாடு தொடர்பிலான அறிவு‚ மனோநிலை‚ மற்றும் பழக்கங்கள் பற்றிய அளவீடு (முழெறடநனபந யுவவவைரனந யனெ ீசயஉவஉைநள ளுரசஎநல) ஒன்று நடாத்தப்பட்டு முடிவுகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.
13வது திருத்தச்சட்டத்திற்கு அமைய மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகார பரவலாக்கத்தை அனுமதிக் தேவையான நடவடிக்கை எடுக்க சர்வகட்சி பிரதிநிதித்துவ குழு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கமைய மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் பற்றியும் மக்கள் விடுதலை முன்னணி அச்சம் கொண்டுள்ளது.
2003 இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலம். இரு தரப்பும் சமாதான போச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இலங்கையில் சமாதானம் மற்றும் அரசியல் இனக்கப்பாடு தொடர்பில் ஆற்றுப்படுத்தவும் தீர்மானங்களை எடுக்கும் முயற்சிகளுக்கும் அறிவு‚ மனோநிலை‚ மற்றும் பழக்கங்கள் பற்றிய அளவீட்டு முடிவுகள் உறுதுணையாக அமையும் என்ற நோக்கமாகவே இவ் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இக் காலகட்டத்திலும் சமாதான உடன்பாட்டின் ஒரு பகுதியாக மத்திய அரசுக்குக்கும் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக அதிகம் பேசப்பட்டது. பொலிஸ் அதிகாரங்கள் அதிகம் இருக்க வேண்டியது மத்திய அரசிடமர அல்லது பிராந்திய ஆட்சி அதிகார சபையிடமர என்று கேட்டபோது‚ சிங்கள மக்களின் நான்கில் ஒரு பகுதியினர் பொலிஸ் அதிகாரங்கள் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் 63 சதவீதமான தமிழர்களும் 43 சதவீதமான முஸ்லிம்களும் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.
அதே போன்று இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு‚ வெளிநாட்டுக் கொள்கை‚ நீதிமன்றம் மற்றும் நீதித்துறை‚ ஆகிய விடயங்கள் தொடர்பிலான ஆதிகாரம் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதற்கு சிங்கள மக்களின் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியினர் ஆதரவாகவே கருத்து தெரிவிதிருந்தனர். இக்கருத்தை மூன்றில் இரண்டு தமிழர்களும் ஐந்தில் இரண்டு முஸ்லிம்களும் கொண்டிருந்தனர்.
அரைவாசிக்கு மேற்பட்ட சிங்கள மக்கள் போக்குவரத்து‚ கலாச்சார மற்றும் சமய விவகாரங்கள்‚ விவசாய மற்றும் மீன் பிடி மற்றும் பாடசாலை மற்றும் கல்வி போன்ற விடயங்களின் அதிராரங்கள் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர். இக்கருத்தை ஐந்தில் நான்கு தமிழர்களும் மூன்றில் இரண்டு முஸ்லிம்களும் வெளியிடிருந்தனர்.
2003 ஜூன் இந்த ஆய்வு நடாத்தப்பட்ட போது முழுமையான சமாதானமான சூழ்நிலை இருந்தது என்று கூற முடியாவிட்டாலும் அப்போது இருந்த சூழ்நிலையும் இப்போது உள்ள சூழ்நிலையும் நேர் எதிரானவை என்று சொல்லலாம். இந்த நிலைமையில் மக்கள் அபிப்பிராயம் எப்படி மாறியிருக்கும் என்று துள்ளியமாக எதிர்வு கூற முடியாவிட்டாலும்‚ தென் இலங்கையின் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு‚ மக்கள் விடுதலை முன்னணியில் நிலைப்பாடாவவே இருக்கும்.
மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.
14.03.2008
ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
March 10, 2008 by Vikalpa_N
Filed under Democracy, Peace and reconciliation, தமிழ்
ஜனநாயகத்தின் வரைவிலக்கனங்களில் மிகப் பிரபல்யமானது அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் கூறிய “மக்களினால் மக்களுக்காக மக்ககளால் ஆளப்படும் ஆட்சி” என்பதே.
ஜனநாயகத்தில் நேரடி ஜனநாயகம் பிரதிநிதித்துவ ஜனநாயகம் எனும் இரு வகை காணப்பட்டது. கிறேக்க தேசத்தின் எதேன்ஸில் ஜனநாயகத்தின் ஆரம்பம் நேரடி ஜனநாயகம் ஆகும். மைதானத்தில் ஒன்றுகூடிய மக்களின் உயர்த்தப்படும் கைகளை கணக்கிட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சனத்தொகை பெருக்கம்‚ வேறுபட்ட கருத்துகளின் தோற்றம்‚ மற்றும் ஆளும் நிலப்பரப்பின் பூகோல விரிவாக்கம் என்பன நேரடி ஜனநாயகம் வலுவிழந்து பிரதிநிதித்துவ ஜனநாயகமாக பரினமிக்க ஏதுவாக அமைந்தன. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நவீன நிலையாக “அரசியல் கட்சி்” எனும் அமைப்பு உள்ளது. வேறுபட்ட கொள்கைகளை உடையவர்களை பிரதிநிதித்துவப்படுத்த கட்சி எனும் அமைப்பு தோற்றம் பெற்றது. ஆனாலும் இன்றைய நிலையில் சாதி‚ இன‚ மத‚ மொழி என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்து‚ அதனடிப்படையில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விளைவது சற்று சலிப்பான விடயம்.
தெரிவித்தல் – தெரிந்து கொள்ளல்
நடைமுறையில் பொதுவாக நோக்குகையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தாம் மேல் மட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள்‚மற்றும் தமது கொள்கைகள்‚ நிலைப்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றன. அவற்றில் பிரதானமாக மூன்று முறைகளைக் குறிப்பிடலாம். முதலாவது மக்களை நேரடியாக சந்திக்கும் முறை‚ அதாவது கட்சிக்கூட்டங்கள்‚ மேடைப்பேச்சு‚ ஊர்வலங்கள்‚ நேரடி பிரசாரங்கள்‚ துண்டுப்பிரசுரங்கள் போன்றவை மூலம். அடுத்ததாக ஒலி‚ ஔிபரப்பு மற்றும் அச்சு ஊடகத்தின் ஊடாக‚ இதில் தொலைக்காட்சி மற்றும் வானொலி விவாதங்கள்‚ நேர்முகம்‚ கலந்துரையாடல்கள் மற்றும் கட்டுரைகள்‚ விளம்பரங்கள் போன்றவை அடங்கும். மற்றயது நவீன முறையான இன்றநெட் மூலம் இதில் கட்சியின் இணையத்தளம்‚ குழு ஈமெய்ல் போன்றவை அடங்கும். இத்துடன் ளுஆளு ஐயும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இலங்கையை பொருத்தவரை இங்குள்ள அரசியல் கட்சிகள்‚ தகவல்கள் மேல் இருந்து கீழ் நோக்கி நகர போதுமான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கூறப்பட்ட நேரடி மற்றும் ஊடகம் உற்பட உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ளது போன்று தவகல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் அறியப்ப்பட்ட நவீன முறைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. நவீன முறைகள் அதிகளவில் பயன்பாட்டில இல்லாவிட்டாலும் அவை சென்றடையும் சிறுதொகையினர் உள்ளனர் என்பதுடன் அத்தொகை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டும் செல்கிறது. அதற்கேற்ப நவீன முறைளை கட்சிகளும் அதிகளவில் தமது பிரசாரத்திற்கு பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இப்போதைக்கு இலங்கையின் இரு பிரதான கட்சிகள் உற்பட சில சிறிய கட்சிகளுக்கும் கட்சி இணையத்தளம் உள்ளது.
கட்சியின் மேல் இடத்தில் இருந்து தகவல் கீழ் நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவம் என்ன? தகவல் தெரியப்படுத்தப்படுவதன் மூலம் அக்கருத்துத் தொடர்பாக மக்கள் தூண்டப்படுவார்கள். தூண்டப்பட்ட கருத்திற்கு ஏற்ப செயற்பட மக்கள் தயார்நிலைப் படுத்தப்படுவர். உதாரணத்திற்கு‚ ஒரு கட்சி ஒரு விடயம் தொடர்பாக தனது கருத்தை ஏதேனும் முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் அக்கருத்து தொடர்பாக மக்கள் தூண்டப்படுவர்‚ அக்கருத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அக்கட்சி அழைப்பு விடுக்குமானால்‚ அக்கருத்துக்கு ஆதரவாக தூண்டப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்களாம். அல்லது முன்வைக்கப்பட்ட கருத்துக்கு ஆதரவாக தமது வாக்கினை அக்கட்சிக்கு வளங்குவார்கள் என்று எதிர்பார்க்களாம்.
இதன் மறுபக்கமான கீழ் இருந்து தகவல்கள் மேல் நோக்கி நகரும் முறையை பார்ப்போம்.
தமது கட்சியி்ன் சாதாரண உறுப்பினர்கள் உட்பட பொதுவாக பொது மக்கள் கொண்டுள்ள கருத்துகளை‚ அபிப்பிராயங்களை அறிந்து கொள்ள‚ கட்சி உறுப்பினர் கூட்டங்கள்‚ தகவல் பெட்டி‚ முறைப்பாடுகள்‚ கலந்துரையாடல் போன்ற சில எளிய பாரம்பரிய முறைகள் இப்போதைக்கு கட்சிகள் பயன்படுத்துகின்றன.
சாதாரண மக்களின் கருத்தை அல்லது அபிப்பிராயத்தை கட்சி மேலிடம் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்று பார்ப்போம். கட்சி மேலிடம் எடுக்கும் தீர்மானங்கள் கீழ் நோக்கி நகர்த்தப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு‚ தூண்டப்பட்டு‚ அதற்கு சார்பாக செயற்பட தயார்நிலைப் படுத்தப்பட வேண்டும். எனவே மக்கள் முன் கட்சி முன்வைக்கப் போகும் கருத்து மக்கள் ஏற்கனவே விரும்புகிற விதத்தில் இருந்தால் தூண்டப்படல்‚ செயற்பட தயார்நிலைப் படுத்தப்படல் என்பன மிகவும் எளிமையாக சாத்தியப்படும். மாறாக மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏதேனும் ஒரு விடயத்தை முன்வைத்த பின்னர்‚ மக்கள் மறுதலிக்க‚ மக்களை திருப்திப்படுத்த சிரமப்பட வேண்டி ஏற்படும். அப்படியும் மக்கள் ஏற்கவில்லை எனின் கருத்துகளில் மாற்றங்கள் செய்ய நேரிடும். இவை நடைபெரும் காலப்பகுதியில் மாற்றுக் கட்சிகளின் விமர்சனத்திற்கு அகப்பட்டு கட்சியின் பிரபல்யம் குறையும்.
கட்சி முன்வைப்பது மக்கள் மறுதலிக்கும் வகையான தேர்தல் விஞ்ஞாபனம் எனின் கட்சியின் நிலைமை பற்றி கூறத்தேவையில்லை. திரும்ப அப்படியான ஒரு சந்தர்ப்பத்திற்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். மக்கள் அபிப்பிராயம் உள்வாங்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது தெளிவு. எனவே கட்சியின் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல காட்டும் அக்கரையிலும் பார்க்க மக்களின் கருத்துகளுக்கு கட்சி காது கொடுப்பது அத்தியாவசியம். இங்கு தேர்தல் என்று குறிப்பிடப்படுவது ஜனநாயக ரீதியான தேர்தலையே. தேர்தலில் கள்ள வாக்கு போன்ற தேர்தல் வன்முறை அற்றதாக இருப்பது அவசியம்.
பிபர நொரிஸ்
“அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பாடலானது‚ பொதுவாக ஒருபக்க வழியாக கட்சியிடம் இருந்து மக்களை நோக்கியதாக காணப்படுகிறது. ஆயினும் ஜனநாயகத்தில் எவ்வாரேனும்‚ அரசியல் கட்சிகள்‚ கொள்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு உள்ள ஆர்வம்‚ அவர்கள் முக்கியத்துவம் காட்டும் விடயங்கள்‚ மற்றும் அரசியல் விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமானது” என்று‚ ஹவர்ட பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளரும்‚ அரசியல் விஞ்ஞானியுமான பிபர நொரிஸ் குறிப்பிடுகிறார்.
தகவல் என்பது பலம் ஆகும் (ஐகெழசஅயவழை ெளை ீழறநச)
தகவல் தொழில் நுட்ப யுகம் என்று வர்ணிக்கப்படுகிற இன்று‚ அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் துணையுடன்‚ தகவல்கள் மக்களை சென்றடையும் விதமும் வேகமும் அபார முன்னேற்றம் அடைந்துள்ளன. தொழில் நுட்பம் அவ்வளவு வளர்ச்சி காணாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பாரிய வளர்சிசியாகும். சில அரசியல் கட்சிகள் தமது கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இலத்திரனியல் ஊடகத்தை பெருமளவு பயன்படுத்துகின்றன. அச்சு ஊடகத்தை விட இலத்திரனியல் ஊடகம் மக்களை அதிகளவில் போய்ச் சேருகிறது. சில வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை சில கட்சிகளின் ஊடகம் என்று எதிர்க்கட்சிகளால் குறிப்பிடப்படுவதும் உண்டு. மக்கள் விரும்பியேர விரும்பாமலேர பல்வேறு விதமான தகவல்களை அன்றாடம்‚ ஏன் கணத்துக்குக் கணம் பெற்றுக்கொண்ட வண்ணம் இருக்கிறார்கள். பெற்றுக்கொள்கிற தகவல்களுக்கு ஏற்ப மக்களின் அபிப்பிராயங்கள்‚ ஆர்வங்கள்‚ விருப்பு வெறுப்புகள் என்பன மாற்றம் அடைகின்றன. இந்த மாற்றத்தினால் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதகமான மற்றும் சாதகமான தாக்கத்தை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்வது தவிர்க்க முடியாதது.
ஜனநாயகத்திற்கு உண்மையாக மதிப்பளிக்கும் அரசியல் கட்சிகள் தமது தீர்மானங்களில் மக்கள் அபிப்பிராயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியது அதிமுக்கியம். மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளிக்கும் அரசியல் கட்சியின் இருப்பு (நுஒளைவநஉெந) கேள்விக்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும். மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளிப்பதற்கு முதல் மக்கள் அபிப்பிராயம் என்ன என்று தெரித்து கொள்ள வேண்டாமா?
அபிப்பிராய ஆய்வு
எவ்வாறு மக்கள் அபிப்பிராயத்தை தெரிந்துகொள்வது? ஏற்கனவே வேறுபட்ட அளவுகளில் பாரம்பரிய முறைகள் பயன்பாட்டில் உள்ளன. தகவல் தொழிநுட்பத்தின் நேரடி மற்றும் மறைமுகமான தாக்கத்தின் காரணமாக மக்களின் அபிராயங்களில் ஏற்படும் மாற்றங்களை இந்த பாரம்பரிய முறைகளில் எவ்வளவு தூரம் துள்ளியமாக இனங்கண்டு கொள்ளலாம் என்பது சந்தேகத்துக்குரியது. மக்களின் அபிப்பிராயம் என்ன‚ அது எந்த திசையை நோக்கி அசைகிறது என்பவற்றை (வெவ்வேறு மட்டங்களில்‚ அம்மட்டங்களுக்குரிய வலுக்களுடன்) அறிந்து கொள்ள தற்போதுள்ள சிறந்த முறையாக “அபிப்பிராய ஆய்வு” என்பதை குறிப்பிடலாம். இது பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அபிப்பிராய ஆய்வினை மிக எளிமையாக விளக்குவதானால்‚ “ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம்” எனும் தமிழர் பலமொழியை கூறலாம். வைத்தியர் எமது இரத்தத்தை பரிசோதிக்க ஒரு சில துளிகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவது போல‚ ஒரு குறிப்பிட்ட அளவு மக்களை விஞ்ஞான ரீதியில் எழுமாராக தெரிவு செய்து ஆய்வுக்குட்படுத்தி மொத்த மக்களின் அபிப்பிராயத்தை அறித்து கொள்ளும் ஒரு முறையே இது. அரசியல் கட்சிகள் தீர்மானங்கள் எடுக்கும் போது அபிப்பிராய ஆய்வின் முடிவுகளை கருத்தில் கொள்ளுமாயின் அவை ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பதாக கொள்ளலாம்.
இதுவரை அரசியல் கட்சி என்று குறிப்பிட்டதில் அரசும் உள்ளடக்கம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஜனநாயக அரசு எடுக்கும் தீர்மானங்கள் மக்கள் ஆமோதிப்பதாக இருத்தல் அவசியம். மக்கள் விரும்பாத தீர்மானங்களை மக்கள் மீது திணிக்கலாம். மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை நிறைவேற்றலாம். மக்கள் வெறுக்கும் வரிகளை மக்கள் மீது சுமத்தலாம். ஆனால் இவ்வாறான மக்கள் விருப்புக்கு மாறான நடவடிக்கைகள் நிலைத்திருக்காது. எடுக்கின்ற தீர்மானங்கள் நிலைக்க வேண்டும் எனின் அது மக்கள் ஆதரிக்கும் தீர்மானமாக இருப்பது இன்றியமையாதது. தீர்மானத்திற்கு மட்டும் அல்ல ஆட்சியில் உள்ள அரசுக்கும் இது பொருந்தும்.
மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி


